Posts

Post -23

Image
ஶ்ரீ அருள்மிகு வல்லிபுர ஆழ்வார் ஆலயம் ஆலய முன் தோற்றம்      வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம் இலங்கையின் வட மாகணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும். இவ் ஆலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது. சுதர்சனச் சக்கரம்      ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையை கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயம் விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம்,தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும். இக் கோவிலுக்கென ஐதீகக் கதை ஒன்று உள்ளது. ஐதீகக் கதை,      ஆழ்வார் ஆலயத்தின் ஐதீக வரலாறு அற்புதமானது, அதாவது தற்போது இக் கோவிலின் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று துள்ளிக்குதித்ததாகவும்,  அது ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகின்றது.  கடலோடிகள் அந்த மச்சத்தை ப...

Post - 22

Image
1.  e-kalvi -   http://www.ekalvi.org/     கணிதம் அறிவியல் மற்றும் ஆங்கிலம் போன்ற OFFLINE மின் பாடங்களை இணையத்தினூடாக மாணவர்களுக்கு வழங்கும் சேவை இதுவாகும். இது மட்டுமன்றி  multimedia equipments அதாவது (Laptops, tablets,laser printers )களை வழங்கி உதவுகின்றனர். JUGA-Vic நிறுவனத்தின் தன்னார்வலர்களுடன் சேர்ந்து இந்த செயல்பாட்டை University of jaffna and  Lions Club செயல்படுத்துகின்றனர். இலங்கையில் பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள்  மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட  மாணவர்கள் அதிகமானோர் இதனால் பயனடைகின்றனர். இது 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் உண்மையான பெயர் யாழ்ப்பாண பல்கலைகழக பட்டதாரிகள் சங்கம் ஆகும். இது 2018 ஆம் ஆண்டளவிலேயே e-kalvi என ACNC இன் கீழ் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. உருவாக்கப்பட்ட காரணம்-                போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் கடந்த ஆண்டுகளில் கல்வித்தரத்தில் பின்னடைவை சந்தித்து வந்தன. அதாவது இலங்கையின் 9 மாகாணங்களில் இவை 8 ஆவ...