Posts

Showing posts from April, 2020

Post - 20

Image
              கொரோனா ⇆ இணையம்                                          (இணையமின்றி எதுவுமில்லை) தற்போது கொரோனா வைரஸ்  உலக நாடுகள்  அனைத்திலும் பரவி வருவது எல்லோரும் அறிந்திருப்பதொன்று. இந்த நிலைமையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியிருக்க அவர்களின் பிரதான தகவல் தொடர்பு " இணைய சேவை " ஒன்று தான். மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்காது இருக்க வேண்டும் என்பதால் தங்கள் உறவினர்கள், நண்பர்கள், தொழில்கள் தொடர்பான வேலைகள் அனைத்தையும் இணையத்தின் மூலமே தொடர்பு கொள்கின்றனர். மற்றும் அனைத்து பாடசாலைகள் , அரசாங்க வேலைகள், தனியார் நிறுகவங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.  நூலக நிறுவனம் உட்பட்ட சில தனியார் , அரச நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலைபார்க்கும் வாய்ப்பை அளித்துள்ளது. அதாவது, வீட்டில் இருந்தவாறே இணையத்தின் மூலம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று வீட்டில்முடங்கியிருக்கும் நேரம் அதிகமாக இருப்பதாலும், புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் நாட்டின் அசாதாரண சூழ்நிலை கருதி எதுவும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  நீங்கள் புத்தகங்கள் படிக்கும் ஆசை உள்